இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு

0


தேவை நிமித்தம் முன்னதாக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் இன்று (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்ட்டது.



இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் A.m.இஸ்மாயில் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டிடத்தினை திறந்து வைத்தார்.



முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமானது கல்முனை பிராந்தியத்தில் மிகவும் விசாலமான சுகாதார வைத்திய அதிகாரி காரியமாக காணப்படுகின்றமை கொடுக்கத்தக்கது.



குறித்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம்.நௌஷாட் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








ஊடகப்பிரிவு

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top