ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காத்தான்குடிக்கு விஜயம்.

Dsa
0

 



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காத்தான்குடி அல்-அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயிலுக்கு இன்று(22)விஜயம் செய்தார்.


இதன் போது பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற (துஆ) பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.




இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ)   தேசிய காங்கிரஸ் தலைவர் (காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர்) அலி  சாஹீர் மௌலானா,முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா உட்பட பல பிரமுகர்கள் உலமாக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




இதன் போது ஜனாதிபதிக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தினால் அதன் தலைவர் கே.எல். பரீட் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி மக்களிடம் காஸாவில் உள்ள  சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட 10,769,417/- ரூபாவுக்கான   காசோலையும் கையளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் விசேட  துஆ பிரார்த்தனையை மௌலவி ஏ.ஜி.எம் அமீன் பலாஹி நிகழ்த்தினார்.

நன்றி: வசீர் ஜுனைட் 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top