அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா : அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி

Dsa
0

 


டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸி., அணிக்கு எதிரான போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


தற்போது வரை இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது.



ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு ஆகியன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.


இந்தப் போட்டி முடிவை அடுத்து அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு சற்று நெருக்கடியாக அமைந்துள்ளது.




அடுத்து நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா நாடு திரும்ப நேரிடுவதுடன் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்குள் நுழையும்.


ஒருவேளை பங்களாதேஷ் மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் அரை இறுதி வாய்ப்பை பெறும்.



பங்களாதேஷ் சிறிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா அரை இறுதி வாய்ப்பை பெறும்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top