நண்பனின் மனைவியின் கற்பு களவாடப்பட்டது

Dsa
0

 


மொனராகலையில் 20 வயதுடைய திருமணமான பெண் ஒருவ​ரை, கணவனின் நண்பர் ஒருவர் வன்புணர்வு செய்துள்ள சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கரடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடகும்புர தெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் ​பெண் ஒருவரே கடந்த 07 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது என்னவெனில்,


துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண், அவரது கணவன், கணவனின் சகோதரர் மற்றும் கணவனின் தாய் ஆகியோர் ஒரே வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.


கணவனின் தாய் அருகிலுள்ள வீடொன்றில் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். இந்நிலையில், அவரது மனைவி சுகவீனம் காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.


இதன்போது பெண்ணின் கணவன், தனது சகோதரர் மற்றும் 03 நண்பர்களுடன் வீட்டில் மது அருந்தியுள்ளார். மது அருந்தியவர்கள் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில் கணவனும் அவர்களுடன் சென்று விட்டார்.


நண்பர்களில் ஒருவர் மட்டும் வீட்டில் குறித்த பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு வந்து பலாத்காரம் செய்துள்ளார்.



அத்தோடு, கடந்த 09 ஆம் திகதியன்று வீட்டுக்குத் திரும்பி வந்த அச்சந்தேக நபர், நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.


எனினும், தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் கணவரிடம் பெண் தெரிவித்ததை அடுத்து, இருவரும் கடந்த 09 ஆம் திகதி கரடுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான, பஹலபிட்டிய ரப்பர்வத்தை, நாகல பிபில பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top