அதிபருக்கு 30 வருட சிறை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவிக்கு 01 இலட்சம் ரூபா நட்டஈடு




16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அம்பலாங் கொடை , கொடஹேன கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது . அத்தோடு , துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க ( 30 ) உத்தரவிட்டுள்ளார் . 


அதிபருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேல திகமாக 15,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி , 30 வருட சிறைத்தண்டனையை 10 வருட காலப்பகுதியில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார் . 


அம்பலாங்கொட கொடஹேன கல்லூரியின் அதிபராக இருந்த ஆர் . எம்.மேர்வின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அவருக்கு இந்தத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது . காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாதப் பகுதிவரை , பாடசாலையில் கல்வி கற்று வந்த 16 வயதுக்குட்பட்ட மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர் பில் பிரதிவாதிக்கு எதிராக சட்ட மாஅதிபர் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார் .


இது தொடர்பான நீண்ட விசார ணையின் முடிவில் , குற்றம் சாட்டப் பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக முடிவு செய்யப்பட்டது . இதனையடுத்து ஒவ்வொரு குற் றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் வீதம் 30 வருடங்கள் தண்டனை விதித்த நீதிபதி , தண்டனையை 10 வருட காலத்துக்குள் அனுபவிக்க உத்தரவிட்டார் . மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 5,000 ரூபா 3 வீதம் , குற்றச்சாட்டுகளுக்கும் 15,000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section