ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கம்.

 



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பானது, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஏனையோருடன் நீக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரிகளும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 307 பொலிஸ் உத்தியோகத்தர்களும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 24 தற்காலிக உத்தியோகத்தர்களும், தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எது எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கொரமசொங்கவின் பாதுகாப்பை முற்றாக நீக்கவில்லையென பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section