மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் மற்றும் ஒரு உத்தியோகத்தர் மற்றும் தரகர் ஒருவரும்
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேருந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு இந்த மூவரும் மூன்று இலட்சம் ரூபா இலஞ்சம் கோரும்போது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். -NW