தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மாணவியொருவர் சடலமாக மீட்பு

 


மஹியங்கனை லொக்கலோ ஓயாவிலிருந்து 17 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற இரு மாணவிகளில் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று (20) இரவு லொக்கலோ வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை மாணவி ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த மாணவியை குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொலிஸ் வீதித்தடை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, நேற்று (20) காலையில் வீட்டிலிருந்து சென்ற இரு மாணவிகளும் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section