ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு.

 


அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, 2025 ஆம் ஆண்டு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.


இதன் பிரகாரம், சீருடைக் கொடுப்பனவுடன் சேர்த்து 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபா வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section