புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு.

 




2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில்  பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன், நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெற்றது.


அத்தோடு, நேற்றுடன் நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், வினாத்தாள்களில் உள்ள வினாக்கள் குறித்து மீண்டும் கேட்டு பிள்ளைகளை ஒடுக்க வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.


இதேவேளை, இன்றைய பரீட்சையின் போது பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதுபற்றி எழுத்து மூலமாக பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும், இதுவரையில் அவ்வாறான முறைகேடு தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section