எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் முடிவை இறுதி செய்ய 03 மணி நேரம் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இது போன்ற ஒரு நிகழ்வை எதிர்கொள்ளுமானால், அது மாவட்ட அளவில் முடிவுகளை அறிவிக்கும் என்பதோடு, தேர்தல் மட்டத்தில் அல்ல. ஆயினும், முடிவுகளில் முதல் 02 வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் உள்ளன.
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், எந்தவொரு வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதத்திற்கும் மேலாக ஒரு வாக்கைப் பெறாத பட்சத்தில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.
முதல் 02 வேட்பாளர்களைத் தவிர்த்து, வேட்பாளர்களின் 02 வது மற்றும் 03 வது விருப்பத் தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்தேர்தலில் 03 இற்கு மேற்பட்ட முன்னணி வேட்பாளர்கள் களமிறங்குவதால், 02 வது மற்றும் 03 வது விருப்பத் தேர்வுகள் எண்ணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வரையிலான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், விருப்பு வாக்குகள் எண்ணப்படவில்லை. ஆனால், ஒரு சில நெருக்கமான நிகழ்வுகள் காணப்பட்டன.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலே விருப்பு வாக்கிற்காகச் சென்ற மிகவும் நெருக்கமான தேர்தல் ஆகும். முன்னணி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கான கடுமையான போட்டியில் களமிறங்கினர்.
எனினும், அத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச 50.29 சத வீதத்துடன் 4,887,152 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ரணில் விக்கிரமசிங்க கடும் போட்டியிட்டு 48.43 சதவீதத்துடன் 4,706,3686 வாக்குகளைப் பெற்றார்.
1988 ஜனாதிபதித் தேர்தல் மற்றொரு நெருக்கமான தேர்தலாகும். இதில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பிரேமதாச செல்லுபடியாகும் வாக்குகளில் 50.43 வாக்குகளைப் பெற்று நெருக்கமான வெற்றியைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் 2,569,199 வாக்குகளைப் பெற்ற அதே வேளை, அவருடைய பிரதான எதிர் வேட்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க 44.95 சதவீதத்துடன் 2,289,860 வாக்குகளைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.