அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களான நாங்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதித்தோம்.
பதட்டங்களைத் தணிக்கவும், காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டவும் நடந்து வரும் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்தோம்.
ஜனாதிபதி பிடென், எகிப்தின் ஜனாதிபதி சிசி மற்றும் கத்தாரின் அமீர் தமீம் ஆகியோரின் கூட்டு அழைப்பை இந்த வாரத்தின் பிற்பகுதியில் புதுப்பிக்க, (யுத்தநிறுத்த) ஒப்பந்தத்தை விரைவில் (தயாரித்து) முடிப்பதற்கான நோக்கத்துடன் நாங்கள் ஒப்புதல் அளித்தோம்.
அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கூடுதலாக, தடையற்ற விநியோகம் மற்றும் உதவி விநியோகம் தேவை.
ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவித்தோம்.
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுத்தோம்.