அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமார் 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டன.
பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரிய வந்தது. உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, சுமார் 100,000 க்கும் அதிகமான ஆணுறைகள் தேவைப்பட்டன.
தற்போது, 2024 இல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் கிராமங்களில் 300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.