அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களுக்கு எந்த விதமான அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயினும், இது போன்ற விடயங்களில் எவ்வித நடவடிக்கையையும் பொலிஸாரால் மேற்கொள்ள முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்