ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 2024 / 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினை தொடர்வதற்காக, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பயிற்றப்படாத ஆசிரியர்களுக்காக 02 வருட கால பயிற்சியினை வழங்குவதற்காக கல்வி அமைச்சு குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அத்தோடு, இதற்கமைய 25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கற்கைநெறிக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.