புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்

 



தேசபந்து தென்னகோன் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவின் காரணமாக வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பதிநாயக்க அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் அடுத்த உயர் அதிகாரியாகக் கருதப்படுகிறார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவுக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசாரணையை அடுத்து அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.


சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க மித்தெனிய கனிஷ்ட கல்லூரியின் பழைய மாணவர் ஆவார் என்பது கூடுதல் தகவாகும்.


எது எவ்வாறாயினும், பதில் பொலிஸ் மா அதிபராக இவர் நியமிக்கப்பட்டாலும் இந்நியமனத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட முடியாதென அமைச்சரவை நேற்று தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section