வி.அபிவர்ணா அவர்களுக்கு ஜெம் சர்வதேச பல்கலைக்கழக உலக சமூக சேவையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

 


மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த தொண்டர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் திருமண மண்டபத்தில் இடப்பட்டது.


இந் நிகழ்வானது ஜெம் சர்வதேச பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் கலாநிதி யோ.யூட்நிமலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.




இதன் போது மக்கள் பணியில் தன்னை அதிகமாக அர்ப்பணித்த முல்லைதீவினை சேர்ந்த வி.அபிவர்ணா அவர்களுக்கு ஜெம் சர்வதேச பல்கலைக்கழக உலக சமூக சேவையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை   குறிப்பிடப்பட்டது. 


இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக மாண்புமிகு பேராசிரியர் சு.மோகன் தாஸ் வேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர், எழுத்தாளர் திருவாள் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் கலந்து கொண்டதுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section