5000 கோடி ரூபா மோசடி: இலங்கைக்கு வருகிறது இன்டர்போல்

 



இலங்கையில் 5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விஷேட விசாரணையொன்றுக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த வியாழக் கிழமை (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 


குறித்த இணையக் குற்றவாளிகள் நீர்கொழும்பு பெய்த்துகல பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் கணனி ஆய்வு கூடம் ஒன்றை நடத்தி பல இலட்சம் ரூபாவை இணையத்தினூடாக மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.



பல நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குறித்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் டுபாயில் சைபர் முகாம் ஒன்றை நடத்தி வருவதாகவும், டுபாய் பொலிஸார் குறித்த முகாமை சோதனையிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.


இக்குற்றவாளிகள் டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்துக்கு தெரிவித்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இதனுடன் தொடர்பானதாக சந்தேகிக்கப்படும் 100 வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.



குறித்த மோசடிக்கு மூளையாக செயற்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் 30 அறைகள் கொண்ட 03 மாடிகள் கொண்ட ஹோட்டலை 80 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் 03 மாத காலத்திற்கு பெற்று அதனைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த கணக்குகளை பயன்படுத்தி 5000 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சந்தேக நபர்கள் சில நாட்களில் 800 இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும், அதனை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்துபசார நிகழ்வொன்றையும் நடத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 39 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section