கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் இன்று செவ்வாய்க் கிழமை (30) காலை 32 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இப்பாடசாலையில் தொழிநுட்ப பிரிவு கட்டடத்தின் கூரைப்பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த குளவிக்கூடு ஒன்று, பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்தததையடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.
கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலாளர் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு நேரில் சென்று, குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்களை பார்வையிட்டனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.