சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் மேலங்கி (T- Shirt) அறிமுக நிகழ்வு

 


(றியாஸ் ஆதம்)


சிலோன்  ஜேர்னலிஸ்ட் போரத்தின்  2024 ஆம் ஆண்டுக்கான புதிய மேலங்கி அறிமுகமும் அதனை ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை (15) அக்கரைப்பற்று FN Beach Resort வளாகத்தில் இடம்பெற்றது.


போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாபீர் பெளண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பொறியியலாளருமான யூ.கே.நாபீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு மேலங்கிகளை வழங்கி வைத்தார். 


அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் குறித்த போரத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஊடகவியலாளர்களுக்கே இந்நிகழ்வின்போது மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.


அத்துடன் ஊடகவியலாளர் போரத்தின் தற்போதைய செயற்பாடுகள் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section