போதைப்பொருளால் 14 நாட்களில் 15 இளைஞர்கள் பலி

 


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருளுள் பயன்பாட்டால் கடந்த 14 நாட்களில் 15 இளைஞர்கள் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக 10,000 பொலிஸாரை இடமாற்றம் செய்ய அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாபில் இளம் சமூகத்தினர் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு மிக வேகமாகப் பரவியுள்ளது. 

இதற்கு பஞ்சாப் எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் போதைப் பொருளை வீசுவது காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் பஞ்சாபில் கடந்த 14 நாட்களில் அளவுக்கு மீறி போதைப் பொருள் உட்கொண்ட 15 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ஆளும் ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகள் பலன் அளிக்காத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்குமுன் காங்கிரஸ் ஆட்சி மற்றும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி ஆட்சியிலும் இதனை தடுக்க முடியவில்லை எனப் புகார்கள் உள்ளன.

பஞ்சாபிலிருந்து பிற மாநிலங்களுக்கும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. 

இதன் பின்னணியில் போதைப் பொருள் கும்பலுடன் பஞ்சாப் பொலிஸாருக்கு நட்புறவு இருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

எனவே சுமார் 10 ஆயிரம் பொலிஸாரை உடனே இடமாற்றம் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section