யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்களுடைய காணிகளை மீண்டும் பெற்றுக்கொடுங்கள். தௌபீக் MP பாராளுமன்றில் கோரிக்கை..

 




2024 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 

இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்குவதற்கு சுமார் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுங்கள் எனவும் திங்கட்கிழமை (20) வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.


கடந்த காலங்கள் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் சொந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்களுடைய சொந்த காணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.  திருகோணமலை மாவட்டத்திலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக காணப்படுவதாகவும் பல முயற்சிகள் செய்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை எனவும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இப் பிரச்சினையை தீர்த்துத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.


மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணிய, தோப்பூர், செல்வநகர் பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக காணப்படுவதாகவும் இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.


அவருடைய பாராளுமன்ற உரையில், நாட்டில் தற்போது வாழ்வாதார செலவு உச்சநிலையில் காணப்படுகின்ற நிலையில்  அரச ஊழியர்களது பத்தாயிரம் சம்பள அதிகரிப்பானது கண்துடைப்பு என்றும் இந்த காலகட்டத்தில்  எதற்கும் போதுமானதாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section