பண்டிகை காலங்களில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு பண்டிகை காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு
இதற்கமைய, இன்று (11) அல்லது நாளை (12) எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.