அதிவேக வீதியில் கோர விபத்து - 6 பேர் பலி!

 


தமிழகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் சென்னை திருச்சி தேசிய அதிவேக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த கொடூர விபத்தில் மினி சரக்கு வாகனத்தில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

படுகாயம் அடைந்த 4 நபர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்தும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்தவர்கள் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section